முருங்கை கீரையின் இலை முதல் தண்டு வரை அனைத்திலும் நிறைய பலன்கள் இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. இது "வாழ்க்கையின் மரம்" என்றும் ஒரு சிலர் அழைப்பதுண்டு. முருங்கை பொடி, அறிவியல் சார்ந்த பல நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்களைக் கொண்டுள்ளது.

முருங்கை இலையில் இரும்பு, கால்சியம் , வைட்டமின் சி, வைட்டமின் B6, பொட்டாசியம் , வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ இருப்பதினால் இது நம் உணவு பழக்கத்தில் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

..முருங்கை தூளில் ஒரு தேக்கரண்டிக்கு மூன்று கிராம் புரதம் உள்ளது மற்றும் ஆற்றல் உற்பத்தி, தசை பழுது மற்றும் பலவற்றிற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களும் உள்ளன.

சமயத்தில் பெண்கள் இந்த முருங்கை இலையை சாப்பிடுவதன் மூலம் சரி செய்யலாம். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இரத்த glucose மேம்படுத்துவதாகவும் மேலும் thryoid ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உடலின் இயற்கையான "detox" இந்த கல்லீரல் . இந்த முருங்கை இலை அந்த கல்லீரலை பாதுகாக்க உதவும். கல்லீரல் சேதத்திலிருந்து பாதுகாக்கும். முருங்கையில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், முன்கூட்டிய சுருக்கங்களைத் தடுக்கலாம் மற்றும் நீண்ட காலம் வாழ உதவும்.

இரத்த சர்க்கரை நிலை அதிகமாகும் பொழுது நமக்கு இந்த சக்கரை நோய் மற்றும், mood swings போன்ரவை வரும். அப்போது நாம் இந்த முருங்கை இலையை தொடந்து எடுத்து கொண்டால், இதை அனைத்தையும் கட்டு படுத்த முடியும்.

தாவரத்தின் வேர், பட்டை அல்லது பூக்களில் காணப்படும் இரசாயனங்கள் காரணமாக முருங்கை கர்ப்பிணிப் பெண்கள் அல்லது பாலூட்டும் தாய்மார்களுக்குப் பாதுகாப்பற்றதாக இருக்கலாம்.