"நம்பிக்கை என்பது அனைத்தும் நான் நினைத்தபடி நடக்கும் என்பது அல்ல. அது நாம் தோல்வியுற்றாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை நமக்குத் தரும். அந்தப் பாதையில் மீண்டும் முன்னேற நம்பிக்கையை தரக்கூடியது"

"நீங்கள் எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும் என்று நினைத்தால், உங்களால் யாரையும் மகிழ்விக்க முடியாது. மற்றவர்கள் எதிர்பார்ப்பது போல உங்கள் வாழ்க்கையை வாழ்வது கடினமானது"

"முயற்சிகள் இல்லாத இலக்கு வெறும் கனவு மட்டுமே. இலக்கு இல்லாத முயற்சிகள் நேரத்தை மட்டுமே வீணாக்கும். எப்பொழுது இலக்கும், முயற்சியும் ஒன்று சேருகிறதோ, அப்பொழுதுதான் மாற்றங்கள் ஏற்படும்"

"நிறைய படிக்காமல், தற்போது நல்ல நிலைமையில் இருப்பவர்கள் பலரை என்னால் உங்களுக்கு எடுத்துக்காட்ட முடியும். இந்த உயர்வுக்கு காரணம் அவர்கள் அவர்களை நம்பியது மட்டுமே"