/stp-tamil/media/media_files/COtF0cXBM7pN69TQQ9oI.jpeg)
images are used only for representation purpose only.
என்னதான் வெறும் நூறு ரூபாய்க்கு போட்டாலும் , வாரம் மூன்று முறை பெட்ரோல் போடும் படி ஆகிவிடுகிறது. மாதம் சம்பளம் என்னம்மோ மூன்றில் இருந்து ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தான் ஏறுகிறது ஆனால் இந்த பெட்ரோல் விலை நொடிக்கு நொடி மாறும் போலயே என்று அலுவலகத்தில் பேசியதுண்டு.
கால்களில் பம்பரம் கட்டியது போல் காலை ஆரம்பித்து இரவு வரை போகும் இந்த வேலையில் ஓரளவுக்கு நம்மக்கு தெரியும் , எந்த மாறி ஆபத்து இருக்கிறது என்று. ஆனால் நம்மக்கு தெரியாமல் நிறைய ஆபத்து இருக்கிறது. ஒரு பேச்சுவாக்கில் அவர்களிடம் நடத்திய உரையாடலில் ,
Job - அத ஏன் கேக்குறீங்க !!
நின்றே இருக்க வேண்டிய வேலை. காலை மற்றும் மாலை வேலைக்கு செல்லும் முன் மற்றும் வீட்டுக்கு செல்லும் பொது தான் முக்காவாசி நபர்கள் வந்து பெட்ரோல் போடுவார்கள். அச்சமயம் எங்களால் கழுவறைக்கு கூட செல்லயியலாது . (இது நகர்ப்புறத்தில் உள்ள ஒரு வங்கியாக இருக்கும் படி) . ஊருக்கு வெளியில் இருக்கும் வங்கிகளுக்கு கூட்டமாக இருக்காது, ஆனால் அவ்வப்போது வண்டிகள் வந்துபோகும். இது நாளுக்கு நாள் மாறுமே தவிர , இந்த நேரங்களில் கூட்டம் என்னமோ இருக்கும். இந்த சமயத்தில் தான் இந்த gpay / phonepe எல்லாம் பிரச்சனை செய்யும்.
அதற்க்கு ஒரு திட்டுகள், சண்டைகள் எல்லாம் நடக்கும். நாங்கள் பாட்டில் (bottle ) பெட்ரோல் கொடுக்கக் கூடாது என்பது விதிமுறை. அதை மீறினால் எங்களுக்கு வேலை போய்விடும். அதையும் மீறி இந்த பசங்க வந்து கேட்பார்கள். காலை வேளையில் கேட்டால் முடியாது என்று சொல்லி விடுவோம். ஆனால் இதுவே இரவு நேரங்களில் கேட்டால், முடிந்த வரை முடியாது என்போம். அதையும் மீறி கேட்டால் கொடுத்துவிடுவோம். என்ன செய்வது வாதாட முடியுமா என்ன? இதுவே ஒரு சில பேரைப் பார்த்தால் சந்தேகமாக இருக்கும் அப்போது நாங்களே தரமாட்டோம் . அதையும் மீறி கேட்டால், நாங்கள் மேனேஜரை அழைத்து சொல்லிவிடுவோம் அவர் பார்த்துக்கொள்வார்.
கைபேசி உபயோகிக்கக் கூடாது என்று கூறினாலும், நிறைய பெரு பெட்ரோல் போடும் பொது பேசிக்கொண்டே இருப்பார்கள். இதில் அவர்கள் கூறிய தொகைக்கு தான் போட்டுயிருப்போம் ஆனால் நான் இந்த தொகை சொல்லவில்லை என்று கத்தி கூச்சல் போட்டு பிரச்னை எல்லாம் செய்வார்கள்.
ஒன்றா இரண்டா ? எக்கச்சக்கம் - கஷ்டங்கள்.
வேலையில் அவர்கள் படும் கஷ்டங்கள் பற்றி கேட்ட பொது, அனைவரது முகம் மாறியது. ஏன் என்று வினவிய பொது அவர்கள் , " நின்றே இருப்பதினால், கால்கள், மூட்டு வலிகள் வரும். தனது நெருங்கி நண்பர் வெரிகோஸ் நோய் வந்து வேலையை விட்டதாக கூறும் பொது அவர்களது முகத்தில் சோகம் சூழ்ந்தது.
வெயில், மழை, புயல் , பனி என்று பாராமல் நின்று கொண்டே இருக்க வேண்டும். நாற்காலிகள் இருக்கும். ஆனால் பெட்ரோல் போடும் இடத்தில் வைத்தால் வண்டி வரும் போதும் போகும் போதும் இடையூறாக இருக்கும்.
இதெல்லாம் எதற்க்காக?
இவ்வளவு விஷயங்களையும் தாங்கி கொள்வது " குடும்பத்திற்காக" மட்டுமே. பிள்ளைகளை நன்றாக பக்க வைக்க வேண்டும். கணவர் ஒரு பக்கம் contract வாட்ச்மேன் அல்லது பெரிய கொம்பனியில் கார் ஓட்டினராக ஓடினாலும், நாங்களும் ஒரு பக்கம் ஓடி, முடிந்த வரை பிள்ளையை கஷ்டமில்லாமல் வளர்த்து படிக்க வைக்க வேண்டும்.
Suggested Reading: அழகில் மறைந்துள்ள சோகம்
Suggested Reading:
தனக்கான நேரம் மற்றும் சம்பாத்தியம் - சுயநலமா ? தேவையானதா ?
Suggested Reading:
Suggested Reading:
Postpartum Depressionயை கையாளுவது எப்படி?