Advertisment

நாயகிகள் "secondary characters" தானா?

"படத்தில அந்த ஹீரோ சூப்பர் டா". "டேய் இந்த இடத்திலிருந்து தாவினாரு பாரு" "டேய் அந்த மாஸ் dialogue ல பட்டைய கிளப்பிட்டாருல" என்று சொல்வார்களே தவிர, இந்த நாயகி நன்றாக நடித்துள்ளார் என்று கூறுவார் மிகவும் குறைவு தான்.

author-image
Nandhini
New Update
heroines

Image is used for representation purposes only.

இந்த கட்டுரை யார் மனதையும் புண்படுத்தல்ல  மேலும் இந்த கட்டுரையில் இருக்கும் கருத்துக்கள் , தனிநபரை குறிப்பிடவில்லை. 

Advertisment

அந்த காலத்தில் முக்காவாசி படங்களின் கதைகள் இப்படித்தான் இருக்கும். கதையின் நாயகன் இருப்பார். குடும்பத்தையே அவர்தான் காப்பற்றுவர். மது, புகைபிடித்தல் போன்ற எந்த ஒரு கெட்ட பழக்கமும் இருக்காது. அவர் உண்டு அவர் வேலையுண்டு என்று இருப்பார். கதாநாயகி பணக்கார வீட்டு பெண்ணாக இருப்பர். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கதாநாயகன் மேல் கதாநாயகிக்கு காதல் வரும். பின்னாடியே செல்வார், ஆனால் நாயகன் அவரை புறக்கணிக்க, நாயகி பின்னாலே சுற்றுவர், வில்லன் வந்து நாயகியிடம் ஏதாவது வம்பு செய்யும் பொது நாயகன் காப்பாற்றுவான். இருவரும் நெருக்கமாக கட்டிப்பிடிப்பார். காதல் வந்துவிடும். பின்னர் வில்லனை அடித்து சாகடித்து, இறுதில் நாயகனும் நாயகியும் கல்யாணம் செய்து சந்தோசமாக வாழ்வர்.

இதுவே நாட்கள் போக போக, அந்த 80'ஸ் காலகட்டத்தில் பெரிதாக எந்த ஒரு மாற்றம் இருக்காது. அதே ஏழை நாயகன், படித்த பணக்கார வீட்டு பெண்ணாக நாயகி. இவர்களது சந்திப்பு மோதலில் ஆரம்பிக்கும். பின் இருவருக்கும் சண்டை வர, அது காலப்போக்கில் நாயகனுக்கு காதல் நேர்த்திடும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாயகிக்கும் காதல் வர, நாயகனுக்காக இவர்களை முற்றிலும் மாற்றிக்கொள்ளுமாறு ஆகிவிடும். இந்த காலகட்டத்தில் வில்லனே அந்த அப்பாதான். அவரிடம் சண்டைபோட்டு எப்படி நாயகன், நாயகியை கரம் பற்றுகிறார் என்பது கதையாகும்.

heroines 2

Advertisment

இந்த காலகட்டத்தில், புது விதமாக அணுமுறையை கையாளுவார்கள். எப்போவும் போலே வந்து ஒரு காதல் பாடல், ஒரு இரண்டு மூன்று காட்சிகள் cute ன்ற பெயரில் பண்ணும் சேட்டைகள், வில்லன் கடத்தும் பொருளாக பயன் படுத்துவர். இப்போது இருக்கும் நாயகிகள் அதை விரும்புவதில்லை என்பதினால், இயக்குனர்கள், "நீங்கள் தான் முக்கியம், கதையில் நீங்கள் நகர்த்துகிறீர்கள். படம் முழுக்க வருவீர்கள்" என்று அழைத்து மீண்டும் அழகு பொருளாக மட்டுமே வைக்கின்றனர் . இது ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே. இருவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்பார்கள், நாயகனுக்கு கண்டதும் காதல், நாயகிகள் புறக்கணிப்பர். இருவரும் சண்டை போடுவார்கள். பின்னர் நாயகன் முடியாத ஒருதர்க்கு உதவும் பொது, நாயகி பார்த்து அவர் மீது காதல் வசப்படுவர். இந்த காலகட்டத்தில் வில்லன்கள் அப்பாக்கள் அல்ல மாமாக்கள். எப்போவும் போல சண்டைகள் வரும், இறுதியில் வீட்டார் சம்மந்தத்தோடு கல்யாணம் நடக்கும்.

Women Centric படங்களுமா? 

இந்த women  centric  சினிமாகள் என்பது இப்போது ட்ரெண்ட். ஆனால் ஏன் பெரிதாக வரவில்லை என்றால் முதல் காரணம் பெண்களுக்குகாக எழுத வேண்டும். அவர்கள் ஒரு மாஸ் நாயகனுக்கு எழுத வேண்டியதெல்லாம் ஒரு நாயகிக்கு எழுதினால் எப்படி செல்லுபடி ஆகும்? இதை நாயகிகளே " தேவைக்கு ஏற்ப வைப்போம் மீதத்தை தூக்கிவிடுவோம் "என்று கூறிவர்.

Advertisment

ஏன் பெண்கள் சார்ந்த படங்களில் கூட ஒரு நாயகன் நடித்தால் தான் பார்க்க படுகிறது. தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ," பணம் போட்டால் எடுக்க முடியாது" என்று. என்னதான் அந்த நாயகிக்கு ரசிகர்கள் இருந்தாலும், அவர்கள் ஒரு முழு நீள படமாக அவர்களை வைத்து மட்டும் படம் எடுக்க வேண்டும் என்றால் ஒரு யோசனை வரும்" இயக்குனருக்கு கதை பெருசு. தயாரிப்பாளர்களுக்கு பணம் பெருசு. அப்படியே ஒரு பெரிய நாயகிக்கு கதை எழுதி படம் எடுத்தாலும் அது ஐந்தில் இரண்டு தான் நல்ல படம் என்ற பெயர் வாங்கும். காரணம், ஒன்று அது சம்பந்தப்பட்ட மாதிரி இல்லை அல்லது அந்த கதாபாத்திரத்தின் நம்பக தன்மையை இல்லை. அதனால் பிரச்சனை இரண்டு பக்கமும் தான். 

ஒரு கதையில் நாயகிகள் அனைவரும் "secondary characters" தான். கதையில் அவர்களை தூக்கினாலும் கதை நகரும். இதற்கு காரணம் பெண்கள் வெறும் selling point ஆகா இருப்பதினாலேவா? ? இதற்கு பதில்கள் எப்போது கிடைக்குமோ?

 

Advertisment

Suggested Reading: 

Advertisment
Advertisment

 

women centric
Advertisment